;
Athirady Tamil News

குத்துச்சண்டை களமாக மாறிய துருக்கி நாடாளுமன்றம்: எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு: வைரல் வீடியோ

0

துருக்கி நாடாளுமன்றம் நொடி பொழுதில் குத்துச்சண்டை களமாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குத்துச்சண்டை களமான துருக்கி நாடாளுமன்றம்
சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி தொடர்பாக ஆகஸ்ட் 16 திகதி துருக்கி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பி க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு சண்டையில் ஈடுபட தொடங்கினர்.

இந்த குழப்பமானது, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் ஆளும் AK கட்சியின் எம்.பி, எதிர்கட்சியான துருக்கியின் தொழிலாளர் கட்சி உறுப்பினர் அஹ்மத் சிக்(Ahmet Sik) மீது குற்றச்சாட்டு சுமத்திய பிறகு ஏற்பட்டது.

2022ம் ஆண்டு நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் எம்.பி Atalay-க்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டத்தை குறிப்பிட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் கட்சியை பயங்கரவாத நிறுவனம் என்று எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக்(Ahmet Sik) பேசியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.