;
Athirady Tamil News

இலங்கையில் இடம்பெற்ற பயங்கர விபத்து… 2 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு நேர்ந்த நிலை!

0

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 07 பேர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்றையதினம் (18-08-2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த விபத்து கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரின் சாரதி வாகனம் செலுத்திக்கொண்டிருந்தபோது உறங்கியமையினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காரிகளில் பயணம் செய்தவர்களுள் 3 பேர் கண்டி பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றைய 4 பேரும் கொழும்பு களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தில் 8 மாத குழந்தை, 01 வயது 6 மாதக் குழந்தை, 3 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.