;
Athirady Tamil News

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, மொத்தம் இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.