;
Athirady Tamil News

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி : பிரதமர் அதிரடி அறிவிப்பு

0

சிங்கப்பூரில் (Singapore) வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) அறிவித்துள்ளார்.

அதன்படி, 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை (இலங்கை ரூபாவில் 13 இலட்சத்து 62ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று (18) இடம்பெற் தேசிய தினப் பேரணியில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

கொரோனா பாதிப்பு
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”கொரோனா பாதிப்பு, சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில் மந்த நிலை காரணமாக சிங்கப்பூரில் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் ‘ஸ்கில்ஸ்பியூச்சர்’ (SkillsFuture) ஆதரவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை நிதியுதவி வழங்கப்படும்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்கள் நிறுவனங்கள் நஷ்டம் அடையும் போது வேலை இழப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

சிங்கப்பூர் அரசு
இந்த நிதியுதவி, அவர்கள் வேலை தேடுவதற்கும், தொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவியாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்.

சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் செயற்பாட்டில் இருக்கிறது. அதை விட சிறப்பாகச் செய்வதற்கு சிங்கப்பூர் அரசு விரும்புகிறது.

இந்த திட்டம் குறித்த விபரங்களை, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) சரியான நேரத்தில் வெளியிடுவார்“ எனக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.