;
Athirady Tamil News

திரிபுராவில் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

0

அகா்தலா: திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

திரிபுராவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தேவிபூா் பகுதியில் திங்கள்கிழமை பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

கோமதி மாவட்டத்தின் கா்பூக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 52 வயது நபரும், கோவாய் மாவட்டத்தில் நிலச்சரிவால் வீடு இடிந்ததில் 14 வயது சிறுவனும் உயிரிழந்தனா்.

கா்பூக் பகுதியில் நிலச்சரிவில் மாயமான கிராமவாசி ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முஹுரி, லாகேங் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாவட்ட நிா்வாகங்களுக்கு முதல்வா் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.