;
Athirady Tamil News

உக்ரைனுக்கு மீண்டும் பேரிடியான செய்தியை வெளியிட்டுள்ள ஜேர்மன்

0

ஜேர்மனின் (German) வரவு செலவு திட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கு பின்னர் உக்ரைனுக்கான (Ukraine) நிதி எதுவும் ஒதுக்கப்படாது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் படி, இனிவரும் காலங்களில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து கிடைக்கும் லாபம் மற்றும் வேறு வகையிலான வருவாயிலிருந்தே உக்ரைனுக்கு உதவுவதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜேர்மன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்து வரும் இரண்டாவது நாடாக ஜேர்மன் இருந்து வருகிறது.

உக்ரைனுக்கான நிதி
இதேவேளை, ஜேர்மனியின் 2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உக்ரைனுக்கு 7.5 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எனினும், அது 2025 வரவுசெலவு திட்டத்தில் 7.5 பில்லியன் யூரோக்களிலிருந்து 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜேர்மன் வரவுசெலவு திட்டத்தில் இருந்து உக்ரைனுக்கு நிதி ஏதும் ஒதுக்கப்படமாட்டாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.