;
Athirady Tamil News

கிளிநொச்சியில் தமிழ்மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட செயலமர்வு

0

ஜனாதிபதி தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் தமிழ் மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் தொடர்பான விசேட செயலமர்வு நேற்று(20) நடைபெற்றது.

குறித்த விசேட செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், பதில் அரசாங்க அதிபருமான எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் அவர்கள் இத்தேர்தலுக்கான செயன் முறையிலான அறிவூட்டல்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நலாஜினி , அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.