;
Athirady Tamil News

சஜித் அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் பதவி விலகல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று (21.08.2024)அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரியும் ஆவார்.

தலதா அத்துகோரள

காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் இவர் அரசியலில் பிரவேசித்தார்.

தலதா அத்துகோரள 2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளமையால் மனசாட்சிப்படி செயற்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.