;
Athirady Tamil News

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு

0

கனடாவில் (Canada) சிறுவர் நலக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக கனேடிய சிறுவர் நலன்புரித் திட்டம் அறிவித்துள்ளது.

பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டது.

பொருளாதார சுமை
இந்த நிலையில், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பெற்றோருக்கு ஏற்படக்கூடிய பொருளாதார சுமைகளை கவனத்திற் கொண்டு கனேடிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, 6 வயதுக்கும் குறைந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் 648.91 டொலர்களும், 6 வயது முதல் 17 வயது வரையிலான ஒவ்வொரு பிள்ளைக்கும் 547.50 டொலர்களும் வழங்கப்பட உள்ளது.

உதவு தொகை
இந்த கொடுப்பனவுகள் கனடாவில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தகுதியான குடும்பங்களுக்குச் வழங்கப்படுகிறது.

மேலும், குடும்பத்தின் தேறிய வருமானத்தின் அடிப்படையில் சிறுவர் நலன்புரி உதவு தொகை நிர்ணயக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.