;
Athirady Tamil News

யாழில் கோரம்: நள்ளிரவில் எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்வெட்டு

0

யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று (21) இரவு 11 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாக உள்ள எரிபொருள் நிலையத்தில் குறித்த வன்முறை சம்பவம் நடந்தது.

நெல்லியடி நகரிலுள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரே கத்தியால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு இளைஞர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, ஊழியரை திடீரென கத்தியால் வெட்ட ஆரம்பித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சிசிரிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தின் முன்பாகவே வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.