;
Athirady Tamil News

பாரிய விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சென்ற பேருந்து: 28 பேர் பலியான பரிதாபம்

0

பாகிஸ்தானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஈரானில் விபத்திற்குள்ளானதில் 28 பேர் பலியாகினர்.

ஈராக் நோக்கி 51 ஷியா யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு, பேருந்து ஒன்று பாகிஸ்தானில் இருந்து கிளம்பியது.

மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் குறித்த பேருந்து இரவு வேளையில் விபத்தில் சிக்கியது.

இதில் 28 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்ததும், சாரதியின் கவனக்குறைவு காரணமாகவும் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.