;
Athirady Tamil News

திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்! 7 பேர் பலி

0

இந்தியாவின் லடாக் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

திருமண நிகழ்ச்சி
லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் சென்றது. அதில் பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்பட்டனர்.

துர்புக் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவசர மருத்துவ சிகிச்சை
ராணுவ ஹெலிகாப்டர்கள், 14 விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, முதலில் டாங்ஸ்டேயில் உள்ள ராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 17 பெண்கள் மற்றும் 3 பிள்ளைகள் என உட்பட 21 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.