;
Athirady Tamil News

நல்லூரில் இரத்த தான முகாம்

0

நல்லூர் மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு ஆலய சூழலில் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் , எதிர்வரும் 31ஆம் திகதி சப்பர திருவிழா அன்று, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மறுநாள் தேர்த்திருவிழா அன்றும் 02ஆம் திகதி தீர்த்த திருவிழா அன்றும் காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரையிலும் , 03ஆம் திகதி பூங்காவன திருவிழா அன்று மாலை 04 மணி முதல் இரவு 08 மணி வரை இரத்த தானம் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.