;
Athirady Tamil News

பிரான்சில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட டெலிகிராம் நிறுவனர்

0

டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் (france) உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து நேற்று முன் தினம் (24.8.2024) மாலை அந்நாட்டு காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதைப்பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் முன்னிலை
இவர் தனது தளத்தின் குற்றவியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட துரோவ் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், துரோவ் கைதுக்கு எலான் மஸ்க் உட்படப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.