;
Athirady Tamil News

கனடாவில் இடம்பெறவிருந்த அனர்த்தம் : தக்க நேரத்தில் தடுத்த காவல்துறை

0

கனடாவின்(canada) ஹமில்டன் பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயன்ற 23 வயது இளைஞரை துப்பாக்கியுடன் அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தையும் தடுத்துள்ளனர்.

விழா ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமியிருந்த இடத்தில் குறித்த நபர் ஆயுதம் வைத்திருந்தார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் தகவல்
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை மூலம் பாரிய அனர்த்தம் ஒன்று தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அருகாமையில் இருந்த நபர்கள் காவல்துறையினருக்கு சந்தேகத்திற்கு இடமான நபர் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை சோதனையிட்டு கைது செய்துள்ளனர்.

தயார் நிலையில் இருந்த துப்பாக்கி
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆயத்த நிலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதானவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.