;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மஹாவல்லி

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம் இடம்பெற்றது.

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க அன்ன வாகனத்தில் கஜவல்லி மஹாவல்லி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

அதேவேளை இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தங்க ரத உற்சவமும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை மாம்பழத்திருவிழாவும் மாலை ஒருமுக திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் சனிக்கிழமை, மாலை சப்பரத்திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.