;
Athirady Tamil News

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: ஒருவர் படுகாயம்

0

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவமானது வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று (30.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பரமனாத் சிவாகரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் 37 வயதுடைய செல்லத்துரை கிருஸ்னபாலமன் என்ற இளைஞர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.