;
Athirady Tamil News

Viral Video: மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் நெகிழ்ச்சியான செயல்

0

மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே தற்காலத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரமயமான ஒரு வாழ்க்கையை தான் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

தினசரி அதிகரித்த வேலைப்பளு, அதிகரித்த சமூக வளைத்தளங்களின் பெருக்கம் மேலும் இவற்றின் விளைவால் ஏற்படுகின்ற மன அழுத்தம் என அதிகம் பாதிக்கப்பட்டு தங்களின் உறவினர்கள் குறித்து விசாரிப்பதற்கு கூட நேரம் இல்லாத சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.

இன்னும் சொல்லப்போனால் தன் குழந்தைகளுக்கு கூட தங்கள் கையால் உணவு ஊட்டுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.

இவ்வாறாக மனிதர்கள் மாறி போய் இருக்கும் நிலையில் மனிதர்கள் மற்ற உயிரினங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடங்கள் நிறைய இருக்கின்றது.

இதனை பறைசாற்றும் வகையில் மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.