;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் சாவகச்சேரி – மட்டுவிலில் திறப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை சாவகச்சேரி – மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது.

ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவரும்-2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு தேர்தல் காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.

மேலும் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் விரான் விக்கிரமரட்ண, மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.