;
Athirady Tamil News

மரக்குற்றி விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes)

0

கனரக வாகனத்தில் இருந்த மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மர ஆலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (29) இரவு கனரக வாகனத்தில் இருந்து மரக்குற்றியை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட நபரின் மீது மரக்குற்றி சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ரசி குமார என்பவராவார்.

மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தலையில் ஏற்பட்ட பாரமான விசையுடனான தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பெருங்காயமமே மரணம் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.