;
Athirady Tamil News

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு

0

தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு ஜனாதிபதி அறிவித்ததாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒப்புக்கொண்ட ஜனாதிபதி
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “ 5 வருடங்களாக பாடசாலைகளில் பயிற்சி பெற்றுள்ள 16,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் தொழிலில் பயிலுனர்களாக இணைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்.

எனவே, அவர்களை அரச அலுவலகங்களில் நியமிக்க முடியாது. இப்போது, ​​நாங்கள் அவர்களுக்கு முதுகலை டிப்ளோமா கொடுக்க வேண்டும், அவர்களுக்கு பயிற்சி அளித்து பாடசாலைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்தும் பொது சேவைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை என்ற வகையில் நாங்கள் உடன்படவில்லை.“ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.