;
Athirady Tamil News

ஜனாதிபதிக்கு சொந்தமான ரூ.400 கோடி சொகுசு விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்கா

0

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

இந்த ஜெட் விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவில் இருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரோவின் சொகுசு ஜெட் டசால்ட் பால்கன் 900EX விமானம் (Dassault Falcon 900EX aircraft) டொமினிகன் குடியரசில் பறிமுதல் செய்யப்பட்டது. இது கரீபியன் கடலில் அமைந்துள்ள ஒரு லத்தீன் அமெரிக்க நாடு.

சி.என்.என் படி, அமெரிக்க அதிகாரிகள் இந்த திங்களன்று விமானத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

விமானங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான Flight Radar 24 படி, இந்த ஜெட் விமானம் திங்கள்கிழமை காலை சாண்டோ டொமிங்கோவிலிருந்து ஃபோர்ட் லாடர்டேலுக்கு புறப்பட்டது.

டசால்ட் பால்கன் 900இஎக்ஸ் விமானத்தை வாங்க 13 மில்லியன் டொலர் ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.400 கோடி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2023-ஆம் ஆண்டின் முற்பகுதிக்கு இடையில், மதுரோவுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து இந்த சொகுசு ஜெட் விமானத்தை வாங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக, அவர் ஒரு கரீபியன் ஷெல் நிறுவனத்தைப் பயன்படுத்தினார். அவர்கள் ஏப்ரல் 2023-இல் சட்டவிரோதமாக விமானத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவுக்கும் வெனிசுலா அரசுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டுள்ள.

சான் மரினோவில் மதுரோவின் ஜெட் விமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலா பிரதமர் இந்த விமானத்தை பல வெளிநாட்டு பயணங்களில் பயன்படுத்தியுள்ளார்.

இந்த தனியார் ஜெட் முன்பு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டது மற்றும் புளோரிடாவில் உள்ள Six G Aviation நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் பயன்படுத்திய விமானங்களை வாங்கி விற்கும் ஒரு தரகர்.

பதிவுகளின்படி, விமானத்தை வாங்குவதற்காக செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாட்டின் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் சான் மரினோவில் பதிவு செய்யப்பட்டு வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டது.

இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா 2023 ஜனவரியில் விமானத்தின் பதிவை ரத்து செய்தது. இந்த விமானம் இந்த ஆண்டு மார்ச் மாதம் டொமினிகன் குடியரசை வந்தடைந்தது.

வெனிசுலா அதிபர் மதுரோ இந்த ஆண்டு இந்த தனி ஜெட் விமானத்தில் கயானா மற்றும் கியூபாவுக்கு சென்றார்.

இந்த பறிமுதல் நடவடிக்கை கொள்ளை போன்றது:
வெனிசுலா விமானத்தை பறிமுதல் செய்ததை வெனிசுலா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை ஒரு கொள்ளை என்று கூறியுள்ளது.

அமெரிக்கா மீண்டும் ஒரு குற்றத்தை செய்துள்ளதாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனாதிபதி பயன்படுத்தும் விமானத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் தங்கள் நடவடிக்கையை வலுக்கட்டாயமாக நியாயப்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஒரு அமெரிக்க அதிகாரியான மேத்யூ ஆக்செல்ராட் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் ‘அமெரிக்காவை ஏமாற்றி எந்த நாடும் தனது வேலையை செய்ய முடியாது’ என்கிற செய்தியை அனுப்பும் என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.