;
Athirady Tamil News

உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க

0

பொதுவாக உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்யலாம்.

ஆனால் அதற்கான நேரமும், எப்படி செய்வது? என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஆயுர்வேதப்படி, நமதுக்கு வழக்கமாக வருகின்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் பொடியை வைத்து வைத்தியம் செய்யலாம்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்திற்கு உடலில் எந்திவிதமான பிரச்சினையும் ஏற்படாது. மாறாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களும் கரைந்து பார்ப்பதற்கு சிலிம்மாக மாறி விடுவீர்கள்.

அப்படியாயின் வெந்தயம் , ஓமம், கருஞ்சீரகம் பொடியை வைத்து எப்படி எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வெந்தயம்- 250 கிராம்
வாமு – 100 கிராம்
கருப்பு நெய்- 50 கிராம்
தயாரிக்கும் முறை

முதலில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகிய 3 பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு சிறிது சூடாக்கவும்.

பின்னர் வறுத்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உலர விடவும்.

நன்றாக காய்ந்த பின்னர் மிக்ஸி சாரில் போட்டு பவுடர் செய்து போத்தலில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.

தேவையென்றால் இந்த பொடியுடன் இஞ்சி துண்டுகள் மற்றும் பெருங்காயத்தூள் என்பவற்றை பொடித்து சேர்த்து கொள்ளலாம்.

எடை எப்படி குறையும்?
1. ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 மேசைக்கரண்டி பொடியை கலந்து குடிக்கவும். இதனை தினமும் இரவு குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம். சாப்பிட்ட பின்னர் குடித்தால் இன்னும் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

2. தயிருடன் கொஞ்சமாக பொடி கலந்து சாப்பிடலாம். சுவையும் நன்றாக இருக்கும். இப்படி செய்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் இல்லாமல் போகும்.

3. கோடைக்காலத்தில் மோர் குடிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. மோருடன் பொடியை கலந்து கொண்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

4. பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடிப்பதால் உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் இல்லாமல் போகும். இந்த நச்சுக்கள் மலம், சிறுநீர், வியர்வை உள்ளிட்டவைகள் வாயிலாக வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் எடையில் சிறந்த மாற்றத்தை பார்க்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.