;
Athirady Tamil News

மாதகலில் படகு விபத்து – கடற்தொழிலாளியை காணவில்லை

0

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில் , கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன கடற்தொழிலாளியை , சக கடற்தொழிலாளர்கள் , கடற்படையினர் கடலில் தேடி வருகின்றனர்.

மாதகல் பகுதியை சேர்ந்த ஒரு கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலுக்காக படகொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று இருந்தனர்.

அந்நிலையில் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கிய நிலையில் ஒருவர் கரையை நோக்கி நீந்தி வந்த வேளை , சக கடற்தொழிலாளர்கள் கண்டு , அவரை மீட்டு கரை சேர்ந்தனர்

மற்றையவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். வரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.