;
Athirady Tamil News

காலை பாடசாலைகளுக்கு சென்ற 4 மாணவர்கள் மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்

0

நோர்வூட், சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயிருப்பதாக நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போன மாணவியர்களில் அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் தனஞ்செயன் கஜரூபன், சுப்பிரமணியம் தனூஸ்கர், பார்த்தீபன் தியோஜன் ஆகியோருடன் அனூஜன் இன்றையதினம் (04-09-2024) காலை பாடசாலைகளுக்கு சென்று வீடு திரும்பாத காரணத்தால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.