;
Athirady Tamil News

பொறுப்பற்ற மனிதர்களுக்கு சவுக்கடி கொடுத்த பறவைகள்… இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

0

அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக தாய் பறவை மற்றும் தந்தை பறவை ஆகியன இணைந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் நெகிழ்சியான இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான ஒரு பாசத்தை வேறு யாராலும் கொடுக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் மனிதர்கள் திருமணம் செய்துக்கொண்டு ஒரு வரையறைக்குள் வந்த பின்னர் தான் அவர்கள் குழந்தைகளை பெற்று பொறுப்புடன் வாழ ஆரம்பிக்கின்றார்கள். அதற்காக மனிதர்களுக்கு சட்ட விதிமுறைகள் மற்றும் சமூக விதிமுறைகள் என பல்வேறு விதிகள் குறிப்பிடப்படுகின்றது.

இத்தனை சட்டங்கள் போட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது கூட குழந்தைகளை பெற்று தெருவில் விட்டு செல்லும் தாய் தந்தையினரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆனால் எந்த விதமான வரையறையும் இன்றிய நிலையில் கூட இயற்கையில் எத்தனையோ மிருகங்கள் மற்றும் பறவைகள் தங்களின் குடும்பத்தை பாதுகாப்பதை கடமையாக நினைக்கின்றன.

குடும்பத்தை கண்டுக்கொள்ளாமல் சுயநலமாக இயங்கும் மனிதர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் தற்போது தாய், தந்தை பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவளிக்கும் அரிய காட்சியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.