;
Athirady Tamil News

தபால் வாக்களிப்பு மூலம் நற்செய்திகள் கிடைத்து வருகின்றன! ரணில் வெளியிட்ட தகவல்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் (04-09-2024) ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய அனைத்து அரச ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் இன்றையதினம் (04) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாது எனவும், அவரின் முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு ஆதரவாக அமையும் என ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.