;
Athirady Tamil News

பேருந்து மீது மோதிய பாடசாலை வாகனம்! மாணவர்கள் இருவர் பலி, 40 பேர் காயம்

0

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை வாகனம் விபத்திற்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கபகல் என்ற பகுதியில் தனியார் பாடசாலை வாகனம் ஒன்று சென்றுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது பாடசாலை வாகனம் பலமாக மோதியுள்ளது. இதில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 32 மாணவர்கள் உட்பட காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.