;
Athirady Tamil News

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!

0

சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே, குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை யாரோ வீசிச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது.

அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.