;
Athirady Tamil News

அரசு பேருந்து மீது கார் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!

0

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்து
ராமநாதபுரம், கடலாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் உடல்நலம் சரியில்லாத குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர்.

அதன்பின், வாடகை காரில் தங்கச்சி மடம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது முன்னால் சென்ற அரசுப்பேருந்து திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

5 பேர் பலி
அதில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பச்சிளம் குழந்தை, ஒரு பெண் மற்றும் டிரைவர் ஆகியோர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.