;
Athirady Tamil News

யாழில். வாகனங்கள் அடித்து உடைத்து தீ வைப்பு

0

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் ஒன்றுக்கும், கார் ஒன்றுக்கும் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை வைக்கப்பட்ட தீயினை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் கார் மீது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு , வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை கண்ணுற்ற வீட்டார் தீயினை அணைக்க முயன்றனர். அதன் போது , வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.