;
Athirady Tamil News

ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் சிக்கிய இளைஞன்

0

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துகொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்திவெளி காவல் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்துள்ளனர்.

துப்பாக்கி ரவை
இதன்போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சந்திவெளி காவல்துறையினரால் குறித்த சந்தேக நபர் ஜனாதிபதி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழிலாளர் என்றும், அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.