;
Athirady Tamil News

கட்டுநாயக்காவில் சிக்கிய இந்தியர் வர்த்தகர்… காற்சட்டை பையில் மறைத்து வைத்திருந்த மர்மம்!

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்தியரொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த இந்திய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும், மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.