;
Athirady Tamil News

வாகனங்களில் உள்ள இந்த ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

0

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களும் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது கட்சியை ஊக்குவிக்கும் அல்லது விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள இவ்வாறான ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.