;
Athirady Tamil News

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இறுதிக்கட்டத்தில் பெறுபேறுகள்
“சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.அந்தப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட தயாராக உள்ளோம்.எனது நோக்கம் மிகவிரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதேயாகும்.

பெறுபேற்று முடிவுகள்
இறுதி முடிவுகளின் தயாரிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுகளுக்குச் செல்லும் என்று நான் நினைக்கிறேன். இந்த பெறுபேற்று முடிவுகளை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.