;
Athirady Tamil News

குட்டி இளவரசியின் பிறந்தநாளுக்காக கேக்குடன் காத்திருந்த மகாராணியார்: கிடைத்த ஏமாற்றம்

0

மறைந்த எலிசபெத் மகாராணியார், தனது செல்லப்பேரனின் குழந்தையான லிலிபெட்டின் பிறந்தநாளுக்காக கேக் ஒன்றை வாங்கிவைத்துக்கொண்டு ஆவலுடன் காத்திருக்க, ஹரியும் மேகனும் பிள்ளையை அழைத்துவராததால் அவர் ஏமாற்றமடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கேக்குடன் காத்திருந்த மகாராணியார்
இளவரசர் ஹரியின் மகளான லிலிபெட்டின் முதல் பிறந்தநாளுக்காக, ஒரு மெழுகுவர்த்தி பொருத்திய கேக் ஒன்றை வைத்துக்கொண்டு ஹரி, மேகன் தம்பதியர் குழந்தை லிலிபெட்டுடன் தன்னைக் காணவருவார்கள் என காத்திருந்தாராம் எலிசபெத் மகாராணியார்.

ஆனால், அவர்கள் வரவில்லையாம். தன்னுடன் தேநீர் அருந்த ஹரி மேகன் தம்பதியர் பிள்ளையுடன் வருவார்களா என மகாராணியார் கேட்டுள்ளார். அதற்கு, அவர்கள் ஏற்கனவே அமெரிக்காவுக்கு புறப்பட்டுவிட்டார்களே என பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம், பிரித்தானியாவுக்கு வந்திருந்தும், மகாராணியாரிடம் சொல்லாமலே புறப்பட்டுவிட்டார்கள் ஹரி மேகன் தம்பதியர்.

ஏமாற்றமடைந்த மகாராணியார், என்ன புறப்பட்டுவிட்டார்களா, அவர்கள் என்னிடம் விடைபெறக்கூட இல்லையே என்று கூறி வருந்தியிருயிருக்கிறார்.

வருத்தமடைய வைத்த ஹரி
யாராவது மகாராணியாரையே இப்படி வருந்தச் செய்வார்களா என்று கேட்கிறார், மகாராணியாரின் முன்னாள் உதவியாளரான பால் பர்ரல்.

மகாராணியாரை கௌரவிப்பதற்காகத்தான் அவரது கணவரான இளவரசர் பிலிப் மட்டுமே பயன்படுத்தும் செல்லப்பெயரான லிலிபெட் என்னும் பெயரை தன் மகளுக்கு வைத்திருப்பதாகக் கூறினார் ஹரி.

ஆனால், அவரது இறுதி நாட்களில் தன் பாட்டியாருக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் மட்டுமே கொடுத்துள்ளார் ஹரி!

You might also like

Leave A Reply

Your email address will not be published.