;
Athirady Tamil News

கொழும்பு பிரதான வீதியில் விபத்து : 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

கொழும்பு (Colombo) பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (11) காலை வரக்காபொல (Warakapola) தும்மலதெனிய (Dummaladeniya) பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார வைத்தியசாலை
விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் பேருந்தில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை போக்குவரத்து பிரிவினர் தலையிட்டு நிலைமையை சீர்செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.