;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம் ; கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி

0

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
விபத்தில் ஏறாவூர் – தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைகிளில் பயணித்த இவர், சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.