;
Athirady Tamil News

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலி

0

கண்டி கலஹா – புபுரெஸ்ஸ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் பாலத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை விட்டு விலகி கீழ் வீதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.