;
Athirady Tamil News

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரிசி விலை : கவலை வெளியிட்டுள்ள மக்கள்

0

அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கதிர்காமம் (Kataragama) மற்றும் திஸ்ஸமஹாராம (Tissamaharama) உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மக்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெல் அறுவடை
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சிவப்பு அரிசி ஒரு கிலோ 210 ரூபாய்க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேங்காய் ஒன்றின் விலை 120 முதல் 130 ரூபாய் வரையிலும் மற்ற மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளும் விலை உயர்ந்த நிலையில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கிலோ அரிசி தேவை எந்த வருமானமும் இல்லாமல் எப்படி வாழ முடியும்? இது தொடர்பில் வேட்பாளர்கள் எவரும் அறியாதமை துரதிஷ்டவசமானது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நெல் அறுவடை காலத்தில் கடந்த காலங்களில் அரிசியின் விலை ஓரளவு குறைந்தாலும் இம்முறை ஒருவித சதியால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.