;
Athirady Tamil News

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட பயங்கர சம்பவம்… 11 தேரர்களுக்கு நேர்ந்த நிலை

0

மொணராகலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் தேரர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பிபில பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (15-09-2024) பிற்பகல் பிபில – மஹியங்கனை வீதியில் ஹேபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மஹியங்கனையிலிருந்து பிபில நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, வேனின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த 11 தேரர்களும் காயமடைந்துள்ள நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து வேன் சாரதி உறங்கியதால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நடாத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.