;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் மூவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் மூவர் நேற்று (15) தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளார்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுவன், தொலைபேசியில் கேம் விளையாட தந்தையிடம் தொலைபேசியை கேட்ட போது தந்தை தொலைபேசியை கொடுக்காததால் வீட்டின் அறை ஒன்றுக்குள் சென்று தனது உயிரை மாய்த்துள்ளான்.

மேலும் நெடுந்தீவு பகுதியில் 33 வயதுடைய இளைஞன் தனது உயிரை மாய்த்துளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.