;
Athirady Tamil News

தொடரும் இஸ்ரேல் போர் பதற்றம்: கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

0

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் (Israel) தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் (Gaza) உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மக்கள் தொகை
இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

பலஸ்தீன போர்
இந்நிலையில் பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து ஐ.நா. “பலஸ்தீன போர் மூலம் இந்த உலகம் அப்பாவி மக்களை இழந்து வருகிறது” என்று கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிருத்தத்திற்கு “ஐ.நா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இந்த உலகில் நாங்கள் பணியாற்ற மிகவும் பாதுகாப்பற்ற இடமாக இதைத்தான் கருதுகிறோம்.

இங்கு மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். எங்களின் 300 பணியாளர்களை நாங்கள் களத்தில் இறக்கியிருந்தோம். இன்று இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவிளான பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.