;
Athirady Tamil News

உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் போக்குவரத்து தடை

0

லண்டனின் (london) ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில் போக்குவரத்தை தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நகர மேயர் சாதிக் கான் (Sadiq Khan) அறிவித்துள்ளார்.

இந்த ஒக்ஸ்போர்ட் தெரு (london oxford street) உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாகும்.

அரை மில்லியன் மக்கள்
இதன் மூலம் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஒக்ஸ்போர்ட் தெருவை அன்றாடம் சுமார் அரை மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இத் திட்டத்திற்கு சுமார் 150 மில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.