;
Athirady Tamil News

யாழில். குப்பி விளக்கின் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழப்பு

0

குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின் வெளியே குப்பி விளக்குடன் சென்ற போது , விளக்கின் தீ ஆடையில் பற்றிக்கொண்டது. அதனை அடுத்து வீட்டார் தீயை அணைத்து , மூதாட்டியை காப்பற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.