;
Athirady Tamil News

யாழில். 16 நாள் குழந்தை உயிரிழப்பு

0

கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.

அந்நிலையில் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய வேளை , பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.

அதனை அடுத்து தாயையும் குழந்தையையும் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்நிலையில் குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.