;
Athirady Tamil News

டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான்

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான் அதனை ஜோபைடனின் பிரச்சார குழுவிற்கு அனுப்பியதாக எவ்பிஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் போட்டியிட்டவேளை ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரகுழுவின் தகவல்களை திருடி வேண்டுகோள் விடுக்கப்படாத மின்னஞ்சல்களை பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்களிற்கு அனுப்பினார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.

முக்கியமான தகவல்களை திருடிய ஈரான்
இதன் மூலம் பைடனின் பிரச்சார குழுவின் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்தார்கள் என தெரிவித்துள்ள எவ்பிஐ, அவர்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயன்றார்கள் என தெரிவித்துள்ளது.

அதேவேளை ஈரான் ஹக்கிங்கில் ஈடுபட்டு முக்கியமான தகவல்களை திருடியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்த எவ்பிஐ இன்று ஈரானே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என உறுதி செய்துள்ளனர்.

எனினும் ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பைடனின் பிரச்சார குழுவில் உள்ளவர்கள் பதிலளித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் தங்களை தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ள பல ஊடக நிறுவனங்கள் தாங்கள் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.