;
Athirady Tamil News

அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் சூனியமாக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் வாக்கெடுப்பு
மேலும், அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பன்றி சுமுகமான முறையில் தேர்தலை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினரும் தயார்
அத்துடன் தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வாக்கு உங்கள் உரிமை, அதனை நாட்டு மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு அவசர நிலைமையின் போதும் அழைப்பதற்காக முப்படையினரும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.