;
Athirady Tamil News

வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றால் இந்த முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்!

0

இலங்கையில் நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், 2ம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச்சீட்டு முறையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தால் அப்போதும் திருவுளச்சீட்டு முறைமை பின்பற்றப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.