;
Athirady Tamil News

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள்

0

லண்டன் தெருக்களில் நேற்று திடீரென கவச வாகனம் ஒன்று வலம் வருவதைக் கண்ட மக்கள் திகைப்படைந்தனர்.

லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்

விசாரித்ததில், அது ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்டுக்காக கொண்டு வரப்பட்ட கவச வாகனம் என்றும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டதால், அதை இயக்கியவர்கள் அப்படியே லண்டனை ஒரு சுற்று சுற்றிவர முடிவு செய்ததும் தெரியவந்துள்ளது.

லண்டனின் முக்கிய தெருக்களில் அந்த கவச வாகனம் சுற்றிவர, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதை ஆவலுடன் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் நம் தெருக்களில் கவச வாகனங்கள் வலம் வருவது அவசியம்தான் என்கிறார் லண்டன்வாசி ஒருவர்.

அந்த கவச வாகனம், உக்ரைனுக்கு சுமார் 100 கவச வாகனங்களை விற்ற Tanks-Alot என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.